சென்னை நகரில் வருடந்தோறும் ஆயிரக் கணக்கான வீடுகள் கட்டப்பட்டுக் கொண்டேயிருக் கின்றன, நகரின் முப்புறத்திலும் புதிய புதிய குடி யிருப்புக் காலனிகள் தோன்றி வளர்ந்துகொண்டே யிருக்கின்றன. ஆயினும் சென்னை நகரில் வீட்டுப் பிரச்னை தீராத பிரச்னையாகவே உள்ளது. நடுத்தர மக்களின் குடியிருப்புப் பிரச்னை ஒரு பயங்கர நோயாகவே வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்த தற்போதையப் பிரச்னையை மையமாக வைத்து ஒரு சுவையான நாவலைப் படைத்துத் தந்திருக்கிறார் ஆசிரியர் அகிலன். ஓயாமல் அவரை விரட்டி - தூண்டி ஒரு நாவலைப் படைக்கச் செய்த பேராசிரியர் கி.வா.ஜ. அவர்களுக்கும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு - சிறியதாயினும் ஒரு நாவலைப் படைத்துத் தந்த திரு. அகிலன் அவர்களுக்கும் எங்கள் மனப் பூர்வமான நன்றி உரித்தாகுக. சமூகத்தின் தற்காலப் பிரச்னைகளைச் சுவை யுடனும் சிந்திக்கத் தூண்டும் வகையிலும் எழுதும் திரு. அகிலனின் படைப்புக்களை எதிர்பார்க்கும் வாசகர்களுக்கு இது ஒரு நல்ல விருந்து.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வானமா பூமியா?, அகிலன், Akilan, KuruNovel, குறுநாவல் , Akilan KuruNovel, அகிலன் குறுநாவல், தாகம், THAAGAM, buy Akilan books, buy THAAGAM books online, buy tamil book.
top of page
CHF 12.00Price
bottom of page

