மண்ணூழி காலம் வரை மாணிக்கவாசகர் புகழ் அழியாது நிலைத்திருக்கும் என்பது சத்தியம். அதுபோல் அவர் சொன்ன திருவாசகமும் திருக்கோவையும் என்றேன்றும் அடியார்கள் உள்ளத்திலும் அன்பர்கள் நாவிலும் நிலைத்து வாழும். மாணிக்கவாசகர் அடியாரில் மிக உயர்ந்த அடியார். சித்தர்களில் சிறந்த சித்தர். ஞானிகளில் மேலான ஞானி. அவர் சொன்ன வழியில் நடந்தால் தவம் பெருகும். திருக்கோவை விளக்கவுரை எழுதும் காலத்தில் அவர் அன்பே சிவமாய் என் உள்ளமர்ந்து இந்நூல் இரகசியங்கள் எல்லாம் எனக்குப் போதித்து அருளியதை அடியேன் உணர்ந்தேன். ஆதலால் அவர் இறவாநிலை பெற்ற சித்தர் எனச் சொல்கின்றேன். அதனை நல்லுயிர்களும் அனுபவித்து உணர இந்நூலை ஆழ்ந்து படித்து அறிவினால் ஆராயுங்கள். உங்களுக்கு அறிவு தெளிவாகி அவரின் அருளோடு ஞானம் பிறக்கும்.
திருக்கோவையார் மூலமும் உரையும் / Thirukkovaiyaar
எழுத்தாளர் :ச. தண்டபாணி தேசிகர்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :320
பதிப்பு :4
Published on :2016

