பாரதமும் மகாபாரதமும் வேறு வேறாக இங்கு இல்லை. மகாபாரதம் என்ற இதிகாசத்தை ஒரு கதையாக மட்டுமே பார்க்க முடியாது அது ஒரு வாழ்க்கை நெறி. பண்பாட்டுக் கண்ணிகள் அடுக்கடுக்காக கோர்க்கப்பட்ட சுவையான நெடுங்கதை. இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் வழங்கப்படும் இந்த மாபெரும் மனித இலக்கியத்திற்குக் காலந்தோறும் பல அறிஞர்கள் உரையும் பொருளும் எழுதியுள்ளனர். தமிழிலும் கவிதை நடையிலும் உரைநடையாகவும் பல பதிப்புகள் வந்துள்ளன. ஆயினும் அனைவரும் படிக்கத் தகுந்த எளிய உரைநடை வடிவில் மகாபாரதத்தைத் தமிழ் மக்களுக்குத் தர வேண்டும் என்ற சிறந்த நோக்கோடு ரங்கவாசன் வியாசர் அருளிய மகாபாரதம் என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூல் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெரும் என்று நம்புகிறோம். -பதிப்பகத்தார்.
வியாசர் அருளிய மகாபாரதம் / Viyasar arulia Mahabharatham
20,00 CHFPreis

