இந்தச் சிறுகதைகளை எழுதியுள்ள எழுத்தாளர் பென் ஒக்ரி, புக்கர் விருதினை வென்று, சர்வதேசம் முழுவதும் அறியப்பட்ட ஓர் எழுத்தாளரும், திரைக்கதையாசிரியருமாவார். உக்ரைனைச் சேர்ந்த கிரிகோர் த்யூத்யூன்னிக் ஒரு கூலித் தொழிலாளி. பின்னர் படித்து பட்டம் பெற்று, எழுத்தாளராக சர்வதேச முழுவதும் கொண்டாடப்பட்டவர். எழுத்தாளர் கமாரா லயே கினி குடியரசின் முதல் தலைமுறை எழுத்தாளர். இவரால் எழுதப்பட்ட இவரது சுயசரிதை நூலான 'The dark child' மூலம் உலகம் முழுவதும் அறியப்பட்டவர். அவ்வாறே மலாவி குடியரசைச் சேர்ந்த எழுத்தாளர் கென் லிபென்கா அந்நாட்டு அமைச்சராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.
கருநாகம் / Karunagam
7,50 CHFPreis

