இச்சஞ்சிகையைத் திரு. முதலியாரவர்கள் நமது பார்வைக்கு அனுப்பி வைத்தமைக்காக அவர்கட்கு நன்றி கூறுகிறோம். திரு. முதலியாரவர்கள் பெரிய புராணத்தைத் தமது ஆயுள் முழுமையும் பயின்று ஆராயும் சிறந்த நூலாகக் கொண்டுள்ளாரென்பது சைவ உலகம் அறிந்ததொன்று. சில ஆண்டுகட்கு முன் இப்பெரியார் சென்னைப் பல்கலைக் கழகத்தின் ஆதரவில் பெரிய புராணத்தையும் சேக்கிழாரையும் பற்றிய சொற்பொழிவுகள் சிலவற்றை நிகழ்த்தியதும் அன்பர் பலர் நினைவிலிருக்கும். இவ்வுரை வெளியீட்டில் தமக்குத் தேவார முதலிய திருமுறைகளிலுள்ள சிறந்த பயிற்சி, நுண்ணிய ஆராய்ச்சி முதலியவைகட்கேற்ப இவ்வுரையாசிரியர் பற்பல நுட்பமான பொருள்களை மிகத் திறம்படத் திருமுறை மேற்கோள்களோடு விளக்கியுள்ளது பெரிதும் பாராட்டத்தக்கது. கல்வெட்டு முதலிய சரித்திரச் சான்றுகளும், தில்லை, திருக்கைலாயம் முதலிய தலங்களின் படங்களும் இந்நூற்றாண்டுக் கேற்ற முறையில் இவ்வெளியீட்டில் சேர்க்கப் பெற்றுள்ளன. திருமுறை யாராய்ச்சியில் தலைசிறந்து விளங்கிய காலஞ்சென்ற கயப்பாக்கம்
top of page
CHF 8.00Price
bottom of page

