எந்தப் பக்கத்தை வேண்டுமானாலும் புரட்டி, எங்கிருந்து வேண்டுமானாலும் இந்தப் புத்தகத்தை வாசித்து, ரசித்து மகிழ முடியும். ஒவ்வொன்றும் நிஜம் கலந்த சுவையான கற்பனை. அல்லது கற்பனை கலந்த சுவையான நிஜம். போகன் சங்கரின் தனித்துவமான நடையில் அதை வாசிக்கும் போது கட்டுக்கடங்காத உற்சாகம் பிறக்கிறது. நட்பு, அரசியல், சினிமா, காதல், இலக்கியம், நையாண்டி என்று பக்கத்துக்குப் பக்கம் ஒரு புது விஷயம் முளைக்கிறது. பெரும்பாலும் புன்னகைத்துக்கொண்டேதான் முழு புத்தகத்தையும் வாசிப்பீர்கள் அல்லது, அவ்வப்போது புத்தகத்தை மூடிவைத்துவிட்டு வாய்விட்டுச் சில நிமிடங்களாவது சிரிக்கவேண்டியிருக்கும். அல்லது ஆழ்ந்து சிந்திக்கவேண்டியிருக்கும். நல்ல எழுத்து உணர்ச்சிகளைத் தூண்டிவிடவேண்டும். ரசனை திறனைக் கூர்மைப்படுத்தவேண்டும். இதுவல்லவா வாழ்க்கை, இப்படியல்லவா அதனை ரசிக்கவேண்டும் என்று கிளர்ச்சிகொள்ளச் செய்யவேண்டும். போகனின் எழுத்து அப்படிப்பட்டது.
top of page
CHF 19.00Price
bottom of page

