Ennangal Aayiram
துவக்கத்தில் கண்ணதாசனுக்கு மிக வேண்டியவரான இராம. கண்ணப்பன் கண்ணதாசனின் இளமை காலம் குறித்து எழுதி உள்ளார். கண்ணதாசனின் தந்தை எந்த வேலைக்கும் போகாமல் சீட்டு ஆடக்கூடியவர். இதனால் குடும்பம் மிக வறுமையில் வாடியிருக்கிறது. ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்த கண்ணதாசன் ஊரை விட்டு வெளியேறி வெளி இடங்களில் வேலை தேடியுள்ளார். முதலில் திருச்சி பின் சென்னை என பல இடங்களில் சிறு சிறு வேலைகள். போராட்டங்கள். பல்வேறு பத்திரிக்கைகளில் வேலை பார்த்து பின் ஒரு பத்திரிக்கை ஆசிரியர் ஆகவும் மாறி உள்ளார். பின் தி.மு.க மீது ஈர்க்கப்பட்டு கட்சியில் சேர்ந்தது, கட்சியில் கலந்து கொண்ட போராட்டங்கள், உள் கட்சி அரசியல் என விலாவாரியாக பேசுகிறது புத்தகம்.
காந்திஜியின் சத்திய சோதனை தான் இந்த சுய சரிதை எழுத காரணம் என சொல்லும் கண்ணதாசன் , சத்திய சோதனையில் உள்ளது போல, தான் செய்த பல தவறுகளை மனம் விட்டு கூறுகிறார். உதாரணத்துக்கு
– முதல் வேலையில் “பொருட்கள் சென்று வாங்கும் போது அதற்கு விலை ஏற்றி சொல்லி கமிஷன் அடித்தது
– விலை மாதர் இல்லம் சென்றது – பல நாள் சாப்பிடாமல் இருந்து காசு கிடைத்ததும் ஹோட்டல் சென்று ஆறு மசால் தோசை ஒரே நேரத்தில் ஆர்டர் செய்து சாப்பிட்டது– முதல் முறை பாட்டெழுதி நூறு ரூபாய் கிடைத்ததும் விலை மாது வீடு தேடி அலைந்தது
– நிலையான வருமானம் வந்ததும் ஒரு பெண்ணின் அழகில் மயங்கி மூன்று மாதம் ஆவலுடன் வாழ்ந்தது- ஊருக்கு சென்று திரும்பும் போது அவர் வேறு நபருடன் வாழ்வது கண்டு மனம் வெறுத்தது
எண்ணங்கள் ஆயிரம் / Ennangal Aayiram
Author: கவிஞர் கண்ணதாசன், Kavingnar Kannadasan
Publisher: கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam
Page: 160
Category: கட்டுரைகள்
ISBN: 9788184020106
Published on: 2019
Keywords : Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ennangal Aayiram, கவிஞர் கண்ணதாசனின் எண்ணங்கள் ஆயிரம், கவிஞர் கண்ணதாசன், Kavingnar Kannadasan, Pothu, பொது , Kavingnar Kannadasan Pothu, கவிஞர் கண்ணதாசன் பொது, கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Kavingnar Kannadasan books, buy Kannadhasan Pathippagam books online, buy Ennangal Aayiram tamil book.