கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் பிறந்த சிவகுமார், பல்வேறு இன்னல்களுக்குப் பிறகு எப்படி ஒரு நல்ல நடிகனாய், கதாநாயகனாய் உயர்ந்தார் என்பதைக் கூறுவதே இந்நூல். அவர் காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் இருந்த பலரைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார். நடிகர்கள் சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி கனேசன், ஜெய் சங்கர், ரவிச்சந்திரன், நாகேஷ், முத்துராமன், வீரய்யா, கமல்ஹாசன், ரஜினிகாந்த், நடிகைகள் லட்சுமி, ராதா, ராதிகா, ஆச்சி மனோரமா, ஜெயலலிதா, பாடலாசிரியர்கள் கண்ணதாசன், வாலி, வைரமுத்து, இயக்குநர்கள் ஏ.பி. நாகராஜன், பாலச்சந்தர், பாரதிராஜா, மனிரத்தினம், மணிவண்ணன், ஆர். சுந்தரராஜன், பாலா, தயாரிப்பாளர்கள் ஏ.வி.எம், முக்தா சீனிவாசன், சான்டோ சின்னப்ப தேவர், வசனகர்த்தாக்கக்ள் ஆரூர் தாஸ், கலைஞர் மற்றும் நாடக நடிகர்கள் எனப் பலரைப் பற்றிய நல்ல நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புவோர் படிக்க வேண்டிய நூல்
top of page
CHF 24.00Price
bottom of page

