நான் ரசித்த வர்ணணைகள் / Naan Rasitha Varnangal
நான் வலையில் எழுதத்துவங்கி கிட்டத்தட்ட ஐந்தாண்டுகள் ஆகின்றன பதிவுகள் அறு நூறைத் தாண்டி விட்டது மனமொரு புறம் அப்படி என்னதான் எழுதிக் கிழித்துவிட்டாய் என்று கேட்கிறது. நானும் திரும்பிப் பார்க்கிறேன் அடாடா .... என்னவெல்லாம் எழுதி இருக்கிறாய் பாலா என்று எனக்கு நானே ஷொட்டு கொடுத்துக் கொண்டேன் என் எழுத்துக்களை இவ்வாறுதான் இருக்கும் என்று வகை பிரிக்க முடியாது. பல நேரங்களில் பிறருக்குப் பின்னூட்டம் எழுதும் போது ஏறத்தாழ அதே தலைப்பில் நான் என்றோ எழுதி இருப்பது நினைவுக்கு வரும் அதன் சுட்டியும் கொடுப்பேன் பதிவர்கள் பலரும் அவர்களுக்கு என்று ஒரு பாணி வைத்துக் கொண்டிருக்கிறார்கள் சிலர் ஆன்மீகப் பதிவுகள், சிலர் பயணக் குறிப்புகள், சிலர் கவிதைகள், சிலர் வாழ்க்கைச் சரிதங்கள் சிலர் நகைச்சுவைப் பதிவுகள், சிலர் சிறுகதைகள், சிலர் இலக்கியங்கள் சிலர் அரசியல் என்றவாறு எழுதி இனதைத்தான் எதிர்பார்க்கலாம் என்று கூறிவிடலாம் ஆனால் என் பதிவுகள் நான் பெருமையாகவே சொல்லிக் கொள்வேன் எல்லாச் சுவைகளிலும் இருக்கும் VARIETY IS THE SPICE IN MY POSTS என்று பெருமைப் பட்டுக் கொள்ள முடியும் பதிவுலகில் நான் different. சிறுகதைகள் கட்டுரைகள் கவதைகள் பயணக் கட்டுரைகள் அனுபவப் பகிர்வுகள், நாடகம் நெடுங்கதை ஆன்மீகப் பதிவுகள், என் சிந்தனைப்படி ஓடும் எண்ணங்கள் பதிவில் இருக்கும்
top of page
9,00 CHFPreis
bottom of page

