top of page

Kavingnar Kannadasan Kavithaigal Part 6

 

கண்ணதாசன் கவிதைகள் என்னும் நூல் கவிஞர் கண்ணதாசன் எழுதிய 35 கவிதைகளும் 2 காவியங்களும் 13 இசைப்பாடல்களும் அடங்கிய தொகுப்பு ஆகும். 1944ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் “திருமகள்” என்னும் இதழில் வெளிவந்த “காலை குளித்தெழுந்து” எனத் தொடங்கும் கவிதை முதல் 1959 ஆம் ஆண்டு [1] சனவரித் திங்கள் முதல் நாள் எழுதிய “கிழவன் சேதுபதி” என்னும் கவிதை வரை கண்ணதாசன் எழுதிய பல கவிதைகளில் இருந்து சில கவிதைகளை கவிஞர் நாக. முத்தையா தேர்ந்தெடுத்து எட்டு பிரிவுகளின் கீழ் தொகுத்திருக்கிறார். அவர் “சில சொற்கள்” என்னும் தலைப்பில் ஒரு முன்னுரையும் எழுதியிருக்கிறார். [2] “பதிப்பகத்தார் உரையை” காவியக்கழகத்தின் உரிமையாளர் கண்ணப்பா வள்ளியப்பன் எழுதியிருக்கிறார். இந்நூலின் மூன்றாம் பதிப்பு 1960ஆம் ஆண்டில் வெளிவந்திருக்கிறது. [3] நான்காம் பதிப்பு 1968ஆம் ஆண்டில் வானதி பதிப்பகத்தின் வழியாக வந்திருக்கிறது

கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 6 பாகம்

10,00 CHFPreis
Anzahl
bottom of page